இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

50 0

தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு சித்திரை மாத முதல் நாள் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத முதல் நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி பிறக்கும். இந்த நாளை தமிழ் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

இன்று தமிழ் புத்தாண்டு:

இதன்படி, இன்று தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மக்கள் காலை முதலே உற்சாகமாக காணப்படுகின்றனர். அதிகாலையிலே எழுந்து குளித்து அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டை பாரம்பரியமாக தமிழர்கள் கொண்டாடி வருவதால், இந்த நாளில் காலையிலே தங்கள் வீட்டின் முன்பு வாசல் தெளித்து  கோலமிட்டு அலங்கரித்துள்ளனர். மேலும், செல்போன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காலை முதலே குவிந்து வருகிறது. தமிழ் புத்தாண்டுடன் சேர்ந்து செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் அதிகளவு கோயில்களில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிவாலயங்களிலும், முருகப்பெருமான் கோயில்களிலும், வைணவத் தலங்களிலும், அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் அதிகளவு காலை முதல் காணப்பட்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் சாமி தரிசனம்:

தற்போது தமிழ்நாட்டில் அரசியல் பரப்புரையில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், தமிழ் புத்தாண்டு என்பதால் பல வேட்பாளர்களும் காலையிலே கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தங்களது பரப்புரையைத் தொடங்கி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Related Post

ஆவின் பால் பாக்கெட் கலர் வித்தியாசம்.. இவ்வளவு விஷயம் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

Posted by - April 5, 2023 0
#Aavin Milk : ஆவின் பால்பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கும். பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கேட்டு வாங்கினாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும்…

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - March 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

சென்னை வெள்ளமும் அரசியலும்… பொய் சொன்னவர்கள் மீது வழக்கு தொடருங்கள்… உச்சநீதிமன்ற வழக்கறிஞர் R.கிருஷ்ணமூர்த்தி

Posted by - December 7, 2023 0
சென்னை: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடுக்க அழைப்புவிடுத்துள்ளார். இன்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட…

முதல்நாளே கோளாறு.. மோடி திறந்து வைத்த ராமேஷ்வரம் புதிய பாம்பன் பாலத்திற்கு ஏற்பட்ட நிலைமை

Posted by - April 6, 2025 0
ராமேஷ்வரம் புதிய பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *