திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றார். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் புழக்கம் உள்ளதாகவும், பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்றும் கூறினார். உண்மையை சொன்னால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.