200 தொகுதிகளில் வெற்றி என கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு!

161 0

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அரசியல் அரங்கில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக எதிர்பார்ப்பு இருந்தது. விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும், இரண்டாம் பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க இயலாமல் போனதற்கு கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று விஜய் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் இருமாப்புடன் 200 தொகுதிகளை வென்றுவிடுவோம் என்று கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக நீதி பேசும் திமுக அரசு வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் விஜய் குறிப்பிட்டார்.

Related Post

தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?

Posted by - October 13, 2025 0
தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில்…

’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்

Posted by - March 18, 2025 0
செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றிணைந்து அனைவரும் திமுகவை எதிர்க்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. என்னதான் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் என் விஸ்வாசம் அதிமுகவுக்கு…

வேதனை தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!!

Posted by - October 29, 2024 0
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த த.வெ.க.வினர் சாலை விபத்தில் சிக்கி…

காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்….

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கனவை, அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே கலைத்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் மீது…

எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

Posted by - December 4, 2022 0
RS BHarathi | நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம் – ஆர்.எஸ்.பாரதி கட்சிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *