தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், எதிரிகளை வீழ்த்தும் யுக்தி அதிமுகவிற்கு தெரியும் என தெரிவித்தார்.அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்.
உடம்பில் இருக்கும் இரத்தத்தை கூட திமுகவினர் உறிஞ்சுவிடுவர்கள் என்றும், தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல் என்றும் தெரிவித்தார்.
செந்தில்பாலாஜியை வைத்து ஸ்டாலின் வித்தைக்காட்டி கொண்டிருக்கிறார் என்றும், மக்களை பட்டியில் அடைக்கும் கட்சி தேவையா? என்றும் குறிப்பிட்டார்.