2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், அடுத்த 18 மாதங்களுக்குள் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர், இளைஞர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங்களை தீட்டி வருவதே திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை என்று கூறினார்.அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு என்றும் முதலமைச்சர் கூறினார்.நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்புக்காக இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தேர்வு முகமைகள் முலம் 32,774 பேருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் மூலம் 32,730 பேருக்கும் பணி வழங்கப்பட்டதாக கூறினார்.2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.