ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

87 0

விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னையில் பரப்புரையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, சசிகலா – ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதிக்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பரப்புரையை தொடங்கிய விஜய்

இதனைத் தொடர்ந்து விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து குழந்தை முதல் வயதான பாட்டி வரை பாதுகாப்பில்லை, டீக்கடையில் அமர்ந்து டீ குடிக்க முடியவில்லை. தாக்குதல் நடத்தும் அளவுக்கு போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார். விசில் சின்னத்திற்கு ஒரு வாய்ப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு விஜயே மிரண்டு விட்டார் என ஆதவ் அர்ஜூனா செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். போலீசார் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக மீண்டும் கூட்ட நெரிசல் சம்பவம் நிகழ்ந்து விடக்கூடாது என கருதி வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரைக் காண நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விஜய் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பெரவள்ளூர் காவல்துறையினர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் போலீசார் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 5 ஒலிப்பெருக்கிகள் வைக்க அனுமதி வாங்கி விட்டு 30 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தினார்கள். அதேபோல் 300 பேர் கூடுவார்கள் என சொல்லி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடினார்கள் எனவும் இது தேர்தல் விதிமீறல் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில் தொடர்ச்சியாக விஜய் பரப்புரையில் தடைகள் ஏற்பட்டு வரும் நிலையில் அவர் 234 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - March 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - February 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ…

Posted by - March 26, 2026 0
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக தமிழக சட்டமன்ற…

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *