பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

120 0

பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 128 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் அதை எட்டி அசத்தியது. அந்த அணியின் இளவயது தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.

தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: “ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் கடினமானதாக இருந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஆர்ச்சர் மற்றும் பர்கர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அந்த மிதவேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருந்தது.

எது எப்படி இருந்தாலும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இறுதிவரை களத்தில் இருந்திருக்க வேண்டும். அதன் மூலம் 150-160 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால், இன்றைய டி20 கிரிக்கெட் வடிவத்தில் எது நல்ல ஸ்கோர் என நாம் கணிக்க முடியாது. அதுவும் இம்பாக்ட் பிளேயர் விதி இருக்கும் போது இந்த ரன்கள் போதும் என சொல்ல முடியாது.எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அதனால் இது பதற்றமான தொடக்கமாக இருக்கலாம். தவறுகளுடன் சீசனை தொடங்கி உள்ளோம். நிச்சயம் இது எங்களுக்கு படிப்பினையாக அமையும். நாங்கள் எங்கள் ஆட்டத்தில் நிச்சயம் முன்னேற்றம் காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Related Post

சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி

Posted by - April 21, 2025 0
மும்பை அணி 15.4 ஓவரில் சென்னை நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்தது, ரோகித் சர்மா 76 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில்…

ரிஷப் பண்ட் உடல்நிலை எப்படி உள்ளது…? உலகக் கோப்பையில் விளையாடுவாரா…? புது அப்டேட்..

Posted by - May 31, 2023 0
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கிரிக்கெட் வீரர் ரிஷப்…

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

Posted by - April 25, 2023 0
முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *