பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
திருமணம் என்பது மக்களால் ஒரு முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. திருமணத்தின் மூலம் குடும்பம் என்ற ஒரு அமைப்பு உருவாகிறது. திருமண உறவுகளில் சில சமயங்களில் விரிசல் ஏற்படுகிறது.
திருமணமான சில மாதங்களிலோ வருடங்களிலோ கணவன் – மனைவி பிரிந்து சென்று விடுகின்றனர். திருமண உறவில் ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவை உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக குறைவதால் இந்த பிரச்சினை பெரும்பாலும் எழுகிறது. பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அவ்வாறு திருமண உறவில் மகிழ்ச்சியுடன் வாழ பின்பற்ற வேண்டிய சில வாஸ்து டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
1. வீட்டின் படுக்கையறை மற்றும் தலைவைத்து உறங்கும் திசையை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாஸ்து தோஷம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கூட சீர்குலைத்து விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வட மேற்கு-வடக்கு திசை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த வடமேற்கு-வடக்கு மூலை வீட்டை கொடுப்பது நல்லது. இது வாழ்க்கையை இனிமையுடனும் திருப்தியுடனும் வாழ வைக்குமாம்.
3. வாஸ்துசாஸ்திரத்தின் படி, வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கிறது. அது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளையும் உண்டாக்குமாம். தம்பதியினர் வடக்கு திசையில் தலை வைத்து ஒன்றாக தூங்கினால் எழுந்தவுடன் மிகவும் சோர்வாக உணவார்கள். இது முக்கியமாக காந்த அலைகளால் ஏற்படுகிறது. இது திருமண வாழ்க்கையையும் உடலையும் பாதிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. வாஸ்துசாஸ்திரத்தின் படி, தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவது ஒட்டுமொத்த உறவை ஆழப்படுத்துகிறது. இதனுடன் திருமண வாழ்வில் உற்சாகமும் திருப்தியும் கூடுகிறது. அதிலும் கணவன் தெற்கு நோக்கி தூங்கினால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வராது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.5. வாஸ்துசாஸ்திரத்தின்படி, திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க, கணவனும் மனைவியும் வீட்டின் தென்மேற்கு பகுதியில் தூங்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதி வட்டமாக இருந்தால் அது தோஷத்தை ஏற்படுத்தும். அதனால் குழந்தை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.