திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

176 0

பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

திருமணம் என்பது மக்களால் ஒரு முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. திருமணத்தின் மூலம் குடும்பம் என்ற ஒரு அமைப்பு உருவாகிறது. திருமண உறவுகளில் சில சமயங்களில் விரிசல் ஏற்படுகிறது.

திருமணமான சில மாதங்களிலோ வருடங்களிலோ கணவன் – மனைவி பிரிந்து சென்று விடுகின்றனர். திருமண உறவில் ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவை உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக குறைவதால் இந்த பிரச்சினை பெரும்பாலும் எழுகிறது. பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அவ்வாறு திருமண உறவில் மகிழ்ச்சியுடன் வாழ பின்பற்ற வேண்டிய சில வாஸ்து டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

1. வீட்டின் படுக்கையறை மற்றும் தலைவைத்து உறங்கும் திசையை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாஸ்து தோஷம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கூட சீர்குலைத்து விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வட மேற்கு-வடக்கு திசை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த வடமேற்கு-வடக்கு மூலை வீட்டை கொடுப்பது நல்லது. இது வாழ்க்கையை இனிமையுடனும் திருப்தியுடனும் வாழ வைக்குமாம்.

3. வாஸ்துசாஸ்திரத்தின் படி, வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கிறது. அது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளையும் உண்டாக்குமாம். தம்பதியினர் வடக்கு திசையில் தலை வைத்து ஒன்றாக தூங்கினால் எழுந்தவுடன் மிகவும் சோர்வாக உணவார்கள். இது முக்கியமாக காந்த அலைகளால் ஏற்படுகிறது. இது திருமண வாழ்க்கையையும் உடலையும் பாதிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. வாஸ்துசாஸ்திரத்தின் படி, தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவது ஒட்டுமொத்த உறவை ஆழப்படுத்துகிறது. இதனுடன் திருமண வாழ்வில் உற்சாகமும் திருப்தியும் கூடுகிறது. அதிலும் கணவன் தெற்கு நோக்கி தூங்கினால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வராது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.5. வாஸ்துசாஸ்திரத்தின்படி, திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க, கணவனும் மனைவியும் வீட்டின் தென்மேற்கு பகுதியில் தூங்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதி வட்டமாக இருந்தால் அது தோஷத்தை ஏற்படுத்தும். அதனால் குழந்தை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.

Related Post

சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா

Posted by - April 4, 2023 0
முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் – அரை கிலோ வரமிளகாய்…

செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!

Posted by - January 7, 2023 0
அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi ,…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️

Posted by - March 3, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️ மேஷம்✅ பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு…

IPL 2023: சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ..!

Posted by - April 3, 2023 0
சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல்-லில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. 16-வது ஐபிஎல் கிரிக்கெட்…

அப்சரா, நடராஜ் பென்சிலை பயன்படுத்திருக்கிறீர்களா? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Posted by - November 23, 2024 0
ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *