“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.”
இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, நிகழ்ச்சியில் சாதி ரீதியாக பேசினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும் பொழுது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிக்கொண்டு வரப்படாமல் பின் தங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது” என்று பேசினார்.தற்போது இவரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.