ஆண்ட்டியை நம்பியதால் கரியரை இழந்த நடிகர் கரண்; பிரபலம் கூறிய தகவல்!

97 0

ஹீரோவாக வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு மார்க்கெட்டையும் இழந்தவர் தான் நடிகர் கரண். இவரை பற்றி பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர் தான் நடிகர் கரண். தமிழ் மற்றும் மலையாளத்தில் 70க்கும் அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த அண்ணாமலை படத்தில் சிறிய ரோலில் நடித்த கரண், இதே போன்று கமல் ஹாசன் நடிப்பில் வந்த நம்மவர் படத்தில் நடித்தார். இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த இஸ்ரா என்ற படம் மூலமாக ஹீரோவானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன், சூரன், உச்சத்துல சிவா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். குறிப்பாக வில்லன் மற்றும் ஹீரோ மற்றும் ரோல் கலந்து இவர் நடித்த பக்தி படங்கள் மிகவும் பிரபலம். அதே போல் அஜித் நடிப்பில் வந்த காதல் மன்னன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவருடைய காதல் கோட்டை படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்திருந்தார். திருநெல்வேலி படத்திலும் பிரபு உடன் இணைந்து நடித்திருந்தார்.

கடைசியாக 2016ல் ‘உச்சத்துல சிவா’ என்கிற படத்தில் நடித்தார். இதுவே  இவருடைய கடைசி படமாக இருந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமாவிலிருந்து விலகினார். இந்த நிலையில் தான் கரண் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து தன்னுடைய நடிப்பு திறமையின் மூலமாக சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார்.

கமல் ஹாசனின் நம்மவர் படத்தில் நடித்தார். அவ்வளவு சீக்கிரம் கமல் யாரையும் வில்லனாக கருதமாட்டார். வில்லனுக்காக தேர்வு செய்யப்பட்ட நடிகர்களில் ஒவ்வொருவராக வடிகட்டி கடைசியில் கரணை தேர்வு செய்தார் கமல். அவரது நம்பிக்கையையு காப்பாற்றி கொடுத்தார் கரண். நேருக்கு நேர், லவ் டுடே, கண்ணெதிரே தோன்றினாள் என்று எந்த படமாக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட ரோல்களில் எல்லாம் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

ஹீரோவாக நடித்த படங்கள் ஓரளவு வரவேற்பு பெற்றது. அப்படி கொடுக்கவும் அவருக்கு நம்ம ஹீரோவாயிட்டோம் என்ற தலைக்கனம் அவருக்கு வந்துவிட்டது. கரண் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது அவரிடம் நல்ல அம்சமான பெயர் கொண்ட அவரை விட வயதில் மூத்த ஒரு பெண் அவரிடம் மேனேஜராக இருந்தார். கரண் மற்றும் அந்த பெண் இருவரது கிசுகிசுக்களும் அப்போதெல்லாம் வரும். ஆனால், எனக்கு தெரிந்த வரை இருவருமே நல்ல நண்பர்கள் தான் வெளிப்படையாகவே சொல்லி விடுவார்கள்.

அவரில் வளர்ச்சியில் அந்த பெண் முக்கிய பங்காற்றினார். அவருடன் கதை கலந்துரையாடலில் உடன் இருந்திருக்கிறார். கரணை ஹீரோவாக மட்டுமின்றி கதைக்கு ஏற்ப வில்லனாகவும் நடிக்க சொன்னது அந்த பெண் தான். இருவர் பற்றியும் கிசுகிசுக்கள் அடுத்தடுத்து வரவே கரண் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. இதன காரணமாக அந்த பெண் மேனேஜர் பொறுப்பிலிருந்து விலகினார்.

பின்னர் கரண் பற்றி அவரின் வெளியே வந்ததும் சொன்ன சில விஷங்கள் கரண் சினிமா வாழ்க்கையை பாதித்ததாகவும், அதே போல் அந்த பெண் சில நல்ல வாய்ப்புகள் கரண் கையைவிட்டு போக காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிரது. மேலும் சபிதா ஜோசப் கூறுகையில்,  கரண் கம்பேக் கொடுத்தாலும் கூட அவரால் நிச்சயமாக உச்சம் தொட முடியும். ஹீரோவாக மட்டுமின்றி எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Post

லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

Posted by - May 22, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…

மாமன்னன் படத்திற்கு மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றி.. இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா

Posted by - July 8, 2023 0
மாமன்னன் உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் கடந்த வாரம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு,…

“Emergency பட ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகை கங்கனா ரனாவத்! ஏன் தெரியுமா?!”

Posted by - January 23, 2024 0
அயோத்தியில் நடைபெற்ற ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்ட ஒரு நாள் கழித்து நடிகை கங்கனா தனது வரவிருக்கும் எமர்ஜென்சி படத்தின் வெளியீட்டு தேதியை…

நெல்சன் போட்ட கண்டிஷன்ல ஆடிப்போன சன் பிக்சர்ஸ்.. நம்பிக்கை இல்லாத ரஜினியும் இதுக்கு உடந்தை

Posted by - December 7, 2024 0
ரஜினி திருவல்லிக்கேணியில் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை இயக்கும் லோகேஷ் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை இந்த படத்திற்கு கொண்டு வருகிறார். இந்தப்…

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Posted by - May 30, 2024 0
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *