நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

102 0

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கல் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் வஞ்சுள வள்ளி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினம் பெருமாள் தாயார் வீதி உலா நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமைந்துள்ளது கல்கருடன். ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி திருவிழாவின் ஒரு முக்கிய அம்சம்தான் கல்கருடன் வாகனம். மற்ற கோயில்களில் நடைபெறுகின்ற வாகன சேவைகள் போல் இது இருக்காது. உலக பிரசித்தி பெற்றதும், ஆராய்ச்சியாளர்களால் கூட பல காலமாக தீர்வு கண்டறிய முடியாத மர்மத்தை கொண்டுள்ளதுதான் இந்த கல்கருட சேவை திருவிழா. அப்படி என்ன மர்மம் என்று கேட்கிறீர்களா.

108 வைணவத் திருத்தலங்களில் 20வது தலமாக நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான பங்குனியில் நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கூடுவர்.

மேதாவி மகரிஷியின் தவத்தை நிறைவேற்ற அவருக்கு மகளாக அவதரித்தார் மகா லட்சுமி தாயார். அவரை மானிட உருவில் வந்து ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் புரிந்துகொண்ட தலம்தான் நாச்சியார்கோவில்.

இக்கோயிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டு கால மர்மம் இங்குதான் உள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பு என்றால் இங்குள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல் கருடன் சிலைதான். மார்கழி, பங்குனி என இரண்டு மாதங்களில் மட்டுமே இந்த கல்கருடன் வெளியில் வருவார். இக்கல்கருட பகவான் சன்னிதியிலிருந்து வெளியில் வரும்போது வெறும் 4 பேர் மட்டுமே அவரைச் சுமந்து வருவார்கள்.

அதற்கு பின்னர்தான் இருக்கிறது மர்மமே. கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்கும். இப்படி 64, 128 என்று அதிகரித்துக் கொண்டே செல்லும் எண்ணிக்கை சேவை சுற்று முடிந்து கல்கருடன் சன்னிதியை நெருங்கும் வரை சுமந்து வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து கொண்டே வந்து கடைசியாக சன்னிதியில் இறக்கி வைக்கப்படும்போது 4 பேர் மட்டுமே சுமந்து வருவார்கள்.

எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் இந்த எடை கூடும் மர்மத்தை ஆராய்ந்து பார்த்தும் இன்று வரை விடை காண முடியாதது இக்கல்கருடனின் சிறப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரி கல்கருடன் எடை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். 4 டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். கல் கருடனின் ரகசியம் மட்டும் இன்னும் யாருமே அறிய முடியாத மர்மமாகவே உள்ளது.

அந்த வகையில் நேற்று மாலை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவராக வீற்றிருக்கும் கல் கருடரை சன்னதியில் இருந்து வெளியே எடுத்து வரும் போது நான்கு பேர் மட்டுமே தூக்கினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கருடரின் எடை கூட துவங்கும். கருடரின் எடை அதிகரிக்க அதிகரிக்க அவரை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கையில் 8, 16, 32, 64 என படிப்படியாக அதிகரித்து, இறுதியாக 128 பேர் இந்த கல் கருடரை சுமந்து வந்தனர்.

இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். கல் கருட சேவையை தரிசனம் செய்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டு இருந்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது நாச்சியார்கோவில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Post

தனியார் உணவகம் பெயரில் நூதன மோசடி: கைதான கர்நாடக வாலிபர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

Posted by - December 14, 2023 0
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார்.…

செயலற்று கிடக்கும் மாநகராட்சி;கும்பகோணத்தில் நாய்கள் தொல்லை – பொதுமக்கள் அச்சம்!

Posted by - February 22, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால்…

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *