அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

133 0

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸ் பதவி மாற்றம் பணி செய்யப்பட்டு தலைவர் பதவியை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸே எடுத்துக்கொண்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.,

2026 இல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து வருகிறேன். அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கருதி முழு மனதுடன் இந்த அறிவிப்பை நான் இன்று வெளியிடுகிறேன் என்று அன்புமணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இனி அன்புமணி தலைவர் இல்லை – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பது மட்டுமல்லாமல் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்றும் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அமைப்பு ரீதியாகவும் மாற்றம்

எனது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பதவி வரிசை அறிவிப்பதில் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவதலைவர் ஜி கே மணி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா என அணி பொறுப்பாளர்கள் உள்ளவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவார்கள். இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றுபட்டு உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மே 11 மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இதுவரை கண்டிராத அளவில் மாபெரும் வெற்றிமாறாக நடத்திட மாநாட்டு குழு தலைவராக நியமன செய்யப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களோடு இணைந்து ஒன்றுபட்ட உணர்வோடு உழைக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ராமதாஸ் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முற்றிய மோதல் – நீக்கப்பட்ட அன்புமணி – ராமதாஸ் ஆவேசம்

பாட்டாளி மக்கள் கட்சியை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதில் நிறுவனரான ராமதாஸ்க்கும், தலைவரான அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடைபெற்று வந்ததாகவும், அதுதான் கடந்த பொதுக்குழுவில் வெடித்து, இளைஞரணி தலைவர் பதவி குறித்து நிர்வாகிகள் மத்தியிலே இருவரும் காரசாரமாக விவாதிக்க காரணம் என கூறப்பட்டது. அப்போது, ஆவேசமான அன்புமணி தான் பேசிக்கொண்டிருந்த மைக்கை தூக்கி டேபிளில் போட்டார். அதன்பின்னரும் ராமதாஸ், கட்சி என்னுடையது இங்கு நான் சொல்பவர்கள் தான் இருக்க  வேண்டும், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் பேசினார். அது இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து வேறுபாட்டை பட்டவர்தனமாக காட்டியது.

சமாதான படலம் தோல்வி – நீக்கப்பட்ட அன்புமணி

அதன்பின்னர், தைலாப்புரம் தோட்டத்தில் வைத்து அன்புமணியை சமாதானம் செய்ய நிர்வாகிகள் முயற்சித்தது பலனிக்களிக்கவில்லை. தன்னை கட்சியில் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும், மாறி வரும் கள சூழலுக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அதனை ஏற்காத ராமதாஸ், அவரை அந்த பதவியில் இருந்தே தூக்கி எறிந்துள்ளார்.

Related Post

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Posted by - October 2, 2025 0
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

Posted by - December 17, 2025 0
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய்…

விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்- வெளிவந்த அதிரடி தகவல்

Posted by - February 17, 2024 0
நடிகர் விஜய் நடிகர் விஜய், லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும்…

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

Posted by - November 27, 2025 0
Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும்…

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *