தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

189 0

மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலாப் பொருட்களை கொண்டு மயோனிஸ் தயாரிக்கப்படுகிறது. பச்சை முட்டை பயன்படுத்துவதால் கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் மயோனிஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Salmonella typhimurium, Salmonella enteritidis, Escherichia coli, மற்றும் Listeria monocytogenes போன்ற கிருமிகளால் உடல்நலத்திற்கு பல்வேறு வகைகளில் தீங்கு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது. இதனால் குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை போன்றே மயோனிசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயோனிஸ் அதிகமாக கிரில் சிக்கன் போன்ற உணவுப்பொருட்கள் தொட்டு சாப்பிடவே கொடுக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த மயோனிஸ் பொருளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் தொற்று நோய் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் தொற்றி விட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவே சுகாதாரத்துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல உணவு வணிக நிறுவனங்கள் மயோனிஸ் தயாரிக்க பச்சை முட்டையை பயன்படுத்துவதாகவும் முறையற்ற தயாரிப்பு, முறையற்ற சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை அபாயத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தரமான உணவை உணவகங்களில் வழங்க வேண்டும். இதுதான் அரசின் நோக்கம். பாதுகாப்பான உணவு சூழலை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம். உடலந்லத்தை பாதுகாக்க தரமான உணவை உண்பது முக்கியம். மயோனிசுக்கு தடை விதித்துள்ளதால் சில காலங்களுக்கு இதன் பயன்பாடு குறையும். முறையான பாதுகாப்பு குறித்து தகவல் வரும்வரை இந்த தடை தொடரும்.” எனத் தெரிவித்தனர்.

 

Related Post

கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

Posted by - July 29, 2023 0
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Posted by - March 27, 2023 0
தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை…

நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மையை விளக்கி வெளியிட்ட வீடியோ

Posted by - November 14, 2025 0
சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.…

பொதுமக்களே கவனம்… அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்…

Posted by - September 26, 2023 0
சென்னை: நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:- செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *