அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

189 0

ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு உத்தரவு. அது என்ன தெரியுமா.?

ஏடிஎம்-களில் பணம் எடுப்போரின் ஒரு முக்கிய பிரச்னையாக இருப்பது, அங்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருப்பது தான். இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவிப்பு

தற்போதெல்லாம், ஏடிஎம் சென்று பணம் எடுப்போருக்கு பெரிய பிரச்னையாக இருப்பது, அங்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருப்பதுதான். ஆம், முன்பெல்லாம், ஏடிஎம்-களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்களும் வைக்கப்பட்டிருந்தன. அதனால், மக்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவில் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இப்போதெல்லாம், குறைந்தபட்சம் 500 ரூபாய் மற்றும் அதன் பெருக்கல்களில்தான் பணத்தை எடுக்க முடியும்.

இதனால், 500 ரூபாய்க்கும் குறைவாக பணம் எடுக்க விரும்புவோருக்கு, கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சிலர், தங்கள் வங்கிக் கணக்குகளில் குறைவான பணமே வைத்திருப்பார்கள். அதில், 200, 300 ரூபாய் எடுக்க விரும்பினால், அது சாத்தியமில்லாமல் போகிறது. மக்களின் இந்த முக்கிய பிரச்னையை போக்கும் விதமாகத்தான், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவு என்ன.?

ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் குறையை போக்குவதற்காக, ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை, வழக்கமான அடிப்படையில் உறுதி செய்யுமாறும், அதை படிப்படியாக அமல்படுத்தவும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதுவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள், 75 சதவீத ஏடிஎம்-களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள், அனைத்து ஏடிஎம்-களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், குறைந்த அளவில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருவோர் பயனடைவர். மக்களின் சிரமத்தை உணர்ந்து, ரிசர்வ் வங்கி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அதிர வைக்கும் வாட்ஸ்அப் விபச்சாரம்..! 14,000 அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரம்..!

Posted by - December 9, 2022 0
வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து அந்த படத்தை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஐதராபாத்தில் வாட்ஸ்அப் மூலமாக விபச்சாரம் நடத்திய…

உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனை

Posted by - July 8, 2023 0
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1…

வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார்

Posted by - February 24, 2024 0
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர்…

தொடர் இருமல் மற்றும் சளி உள்ளதா..? ஒருவேளை இந்த நோய் காரணமாக இருக்கலாம்

Posted by - December 3, 2024 0
பருவகால ஒவ்வாமை, மாசுபடுத்திகள் அனைத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தொடர்ந்து இருமல் மற்றும் சளியை அனுபவிக்கிறீர்களா? இது எளிதாக குணமாகவில்லையா? இது மற்றொரு நுரையீரல்…

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்

Posted by - October 28, 2023 0
கொச்சி: இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *