தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

246 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் களத்தில் குதித்துள்ளன. இந்த சமயத்தில் தமிழக அரசியல் களத்தில் அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏற களத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள பரப்புரை:

திமுக மிகப்பெரிய கூட்டணியை தங்கள் வசம் வைத்துள்ள நிலையில், அதிமுக – பா.ஜ.க.வுடன் கூட்டணியை வைத்துள்ளது. நடிகர் விஜய் கூட்டணிக்கு சில முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இணைய வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய தமிழ்நாட்டில் சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது. தொலைக்காட்சி, நாளிதழ்களை காட்டிலும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சமூக வலைதள வளர்ச்சி அபரிமிதமானது.

அரசியல் கட்சிகள் திட்டம்:

கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்தினர். ஆனால், இந்த முறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த போட்டி ஏற்பட்டிருப்பதாலும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதள பரப்புரைகளுக்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்காக அதிகாரப்பூர்வமாக உள்ள அரசியல் ஐடி அணிகள் மட்டுமின்றி அதிகளவில் சமூக வலைதள பக்கங்களையும், அதை கண்காணிப்பதற்கு ஆட்களையும் நியமித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜய்க்கு சமூக வலைதள பரப்புரை என்பது அவரது ரசிகர்களால் எந்தவித தடையும் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அவர்களை விஜய் விர்சுவல் வாரியர் என்று அழைத்தார்.

சமூக வலைதள போர்:

அதேபோல, நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு ஆதரவாக கடந்த பல ஆண்டுகளாகவே இணையதளங்களில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் அடுத்த 10 மாதங்களுக்கு தீவிரமாக செயல்பட உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் முடிவுகளையும் மாற்றும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது.

இதனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவு பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகளவு பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களது ஐடி அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. அரசியல் களத்தில் நேரடியாக நடக்கும் வார்த்தை மோதல், வார்த்தை போர்களை காட்டிலும் அடுத்த 10 மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் வார்த்தை போர் மற்றும் கருத்து மோதல் உச்சகட்டமாகவும், உக்கிரமாகவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்து வைப்பது போல எதிர்க்கட்சிகளை நாகரிகமாகவும், அதேசமயம் ஒவ்வாெரு கட்சியின் ஆதரவாளர்களில் சிலர் எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளாலும் விமர்சிப்பார்கள் என்பதால் சமூக வலைதளம் ரணகளமாக மாறப்போகிறது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

Related Post

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - May 17, 2023 0
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 ரூபாய் அனுப்பி பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி

Posted by - March 10, 2023 0
தூத்துக்குடி: நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *