இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

199 0

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்காக தடபுடலாக 24 வகையான அசைவ விருந்து மற்றும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் உணவு அருந்துவதற்காக பந்தியில் அமர்ந்தனர். அப்போது முதலமைச்சர் சாப்பிட்ட பின் தான் தொண்டர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பந்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் திமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அசைவ உணவுக்காக வைக்கப்பட்ட இலையிலேயே சிலர் தலை வைத்து படுத்து உறங்கினர்.

மேலும் சிலரோ ஏன் தான் வந்தோம் என நினைத்து தலையில் கை வைத்தும், சக தொண்டர்களுடன் புலம்பியபடியும் அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட வந்த இடத்தில் நாளிதழை படித்து கொண்டிருந்தனர்.

பின்னர் ஒரு வழியாக முதலமைச்சர் சாப்பிட்ட பின் உணவு பறிமாறப்பட்ட நிலையில் திமுக தொண்டர்கள் அசைவ விருந்தை ருசித்து சென்றனர்.

இதனிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில் உணவு பரிமாற கேரளாவில் இருந்து பணியாட்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், திமுக தொண்டர்கள் கேட்ட உணவுப் பொருட்களின் பெயர் தெரியாததால் அவர்கள் பரிமாற முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

கேரளாவில் இருந்து உணவு பரிமாற வந்த 600-க்கும் மேற்பட்டோர் மலையாள மொழியில் பேசியதால் அவர்களிடம் விரும்பிய உணவு களை கேட்க முடியாமல் திமுக தொண்டர்கள் தவித்தனர். இதனால் கேட்ட உணவு கிடைக்காமல் கிடைத்த உணவை உண்டுவிட்டு திமுக தொண்டர்கள் விரக்தியில் புறப்பட்டு சென்றனர்.

Related Post

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Posted by - August 23, 2023 0
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை…

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Posted by - December 13, 2024 0
”கண்கள் பனித்து, இதயம் இனித்த நிலையில், மு.க.அழகிரி எப்போது வேண்டுமானாலும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது” ஒரு காலத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கட்டி ஆண்டவராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *