இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

205 0

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்காக தடபுடலாக 24 வகையான அசைவ விருந்து மற்றும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் உணவு அருந்துவதற்காக பந்தியில் அமர்ந்தனர். அப்போது முதலமைச்சர் சாப்பிட்ட பின் தான் தொண்டர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பந்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் திமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அசைவ உணவுக்காக வைக்கப்பட்ட இலையிலேயே சிலர் தலை வைத்து படுத்து உறங்கினர்.

மேலும் சிலரோ ஏன் தான் வந்தோம் என நினைத்து தலையில் கை வைத்தும், சக தொண்டர்களுடன் புலம்பியபடியும் அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட வந்த இடத்தில் நாளிதழை படித்து கொண்டிருந்தனர்.

பின்னர் ஒரு வழியாக முதலமைச்சர் சாப்பிட்ட பின் உணவு பறிமாறப்பட்ட நிலையில் திமுக தொண்டர்கள் அசைவ விருந்தை ருசித்து சென்றனர்.

இதனிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில் உணவு பரிமாற கேரளாவில் இருந்து பணியாட்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், திமுக தொண்டர்கள் கேட்ட உணவுப் பொருட்களின் பெயர் தெரியாததால் அவர்கள் பரிமாற முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

கேரளாவில் இருந்து உணவு பரிமாற வந்த 600-க்கும் மேற்பட்டோர் மலையாள மொழியில் பேசியதால் அவர்களிடம் விரும்பிய உணவு களை கேட்க முடியாமல் திமுக தொண்டர்கள் தவித்தனர். இதனால் கேட்ட உணவு கிடைக்காமல் கிடைத்த உணவை உண்டுவிட்டு திமுக தொண்டர்கள் விரக்தியில் புறப்பட்டு சென்றனர்.

Related Post

அட்சய திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!

Posted by - May 10, 2024 0
சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மதியம்…

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்

Posted by - May 8, 2025 0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட அதிக சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 12 ஆம்…

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - February 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *