தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுகிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள போத்தீஸ் ஜவுளிக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.