கரூர் துயரம்; உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தை நீக்க வேண்டும்… உச்ச நீதிமன்றத்தில் தவெக முறையீடு

135 0

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மனுவில் விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர் நீதிமன்ற கருத்துகளை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஏற்கெனவே திட்டமிட்ட வழியில் அல்லாமல், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்திய வழியில்தான் த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளின் வாகனம் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளது.மேலும் சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்கவும் வலியுறுத்தியுள்ளது.கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது விஜய் மற்றும் நிர்வாகிகளுக்குத் தெரியாது எனவும், காவல் துறை தடியடி நடத்தியதால்தான் தவெக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.பிரச்னை ஏற்பட்டால் எந்நேரத்திலும் விஜய் மற்றும் நிர்வாகிகளின் வாகனத்தைத் திருப்பி அனுப்ப அதிகாரம் இருந்தும் காவல் துறை அப்படி எதையும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த மனுவை வியாழக்கிழமை விசாரிக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மற்ற மனுக்களோடு சேர்த்து வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Post

ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது – எடப்பாடி பழனிசாமி

Posted by - July 9, 2024 0
ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

பாத்துட்டே இருங்க எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன் – நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி..!

Posted by - March 26, 2024 0
எதிர்வரும் மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவை…

உறுதிமொழி எடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்த விஜய்..

Posted by - August 22, 2024 0
விஜய் இன்று ஆகஸ்ட் 22, காலை முதலே தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுஎன்ன, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர்…

வாழ்க தமிழ்நாடு…பாரதியார் பாட்டு…சட்டமன்ற உரையை நிறைவு செய்த ஆளுநர்

Posted by - January 9, 2023 0
வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிறைவு செய்தார். ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *