“தற்கொ**** எண்ணத்துடன் ChatGPT உடன் பேசும் லட்சக்கணக்கானோர்“; OpenAI வெளியிட்ட பகீர் தகவல்.!

252 0

chatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கானோர் தற்கொலை எண்ணத்துடன் பேசுவதாக OpenAI நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ChatGPT-ஐ உருவாக்கும் OpenAI-ன் தரவுகளின்படி, அதன் ஜெனரேட்டிவ் AI சாட்போட்டைப் பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தற்கொலையில் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீனத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்

மனிதனின் வாழ்வில் தொழில்நுட்பங்கள் தேவை தான். ஆனால், அந்த தொழில்நுட்பத்தாலேயே அவர்கள் பாதிக்கப்படுவதுதான் கொடுமையான விஷயம். இன்றைய காலகட்டத்தில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆம், தொழில்நுட்பம் நவீனமாகி வரும் நிலையில், அதனால் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

அதிலும், மொபைல் ஃபோன்கள் வந்த பிறகு, வயது வித்தியாசம் இல்லாமல், அதில் மூழ்கிக் கிடப்போரே அதிகம். குறிப்பாக, சிறு குழந்தைகள் அதற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்றே கூறலாம். அதனால் இளம் வயதினர் பலர் மனநோய்க்கு ஆளாகும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. இந்த நிலையில், தற்போது ஏஐ-யின் ஆதிக்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியள்ளது. கிட்டத்தட்ட மனிதர்களுக்கு இணையாக அதுவும் செயல்படுவதால், சக நிஜ மனிதர்களை விட்டுவிட்டு, கோடிக்கணக்கானோர் ஏஐ உடன் பழக ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது அந்த வரிசையில் மிகவும் பிரபலமாக உள்ள ChatGPT உடன் உரையாடுவோர் ஏராளம். இந்நிலையில் தான், அதை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம் ஒரு பகீர் தரவை வெளியிட்டுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

OpenAI கூறியுள்ளது என்ன.?

கடந்த திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவு இடுகையில், AI நிறுவனம் தோராயமாக 0.15 சதவீத பயனர்கள் “தற்கொலை திட்டமிடல் அல்லது நோக்கத்தின் வெளிப்படையான அறிகுறிகளை உள்ளடக்கிய உரையாடல்களைக்” கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், ChatGPT-ஐ பயன்படுத்துவதாக OpenAI தெரிவிக்கும் நிலையில், இது சுமார் 1.2 மில்லியன், அதாவது 12 லட்சம் மக்களை குறிக்கிறது. வாராந்திர செயலில் உள்ள பயனர்களில் தோராயமாக 0.07 சதவீதம் பேர் மனநோய் அல்லது பித்து தொடர்பான மனநல அவசரநிலைகளின் சாத்தியமான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் அந்த நிறுவனம் மதிப்பிடுகிறது. அதாவது, சுமார் 6 லட்சம் மக்கள். இந்த தரவு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்னை உருவானது எப்படி.?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஆடம் ரெய்ன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த பிரச்சினை வெடித்துள்ளது. தற்கொலை செய்து கொள்வது எப்படி என்பது குறித்து ChatGPT அவருக்கு குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறி, அவரது பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர்.

அப்போதிலிருந்து, OpenAI, ChatGPT-க்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. மேலும், நெருக்கடி நேர ஹாட்லைன்களுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல், முக்கியமான உரையாடல்களை பாதுகாப்பான மாதிரிகளுக்கு தானாக மாற்றியமைத்தல் மற்றும் நீட்டிக்கப்பட்ட அமர்வுகளின் போது பயனர்கள் இடைவேளை எடுக்க மென்மையான நினைவூட்டல்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மனநல அவசர நிலைகளில் உள்ள பயனர்களை அடையாளம் கண்டு பதிலளிக்க, அதன் ChatGPT சாட்போட்டையும் புதுப்பித்துள்ளதாகவும், சிக்கலான பதில்களை கணிசமாகக் குறைக்க, 170-க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் OpenAI தெரிவித்துள்ளது.

அதன்படி, புதுப்பிக்கப்பட்ட GPT-5 மாடல், தற்கொலை தொடர்பான உரையாடல்களில், பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதில், பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், புதிய மாடல் 91 சதவீதம் துல்லியத்துடன் செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.

Related Post

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு- ஒரு லிட்டர் ரூ.272-க்கு விற்பனை

Posted by - February 16, 2023 0
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர் ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி…

மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்!

Posted by - June 1, 2023 0
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத்…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

Posted by - December 10, 2024 0
குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய…

அன்றே சொன்ன இந்தியா..! டிக்டாக்கிற்கு போதாத காலம்..! அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் தடையா?

Posted by - January 19, 2025 0
TikTok: அமெரிக்க அரசின் தடை உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியை தொடர்ந்து, டிக்டாக் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டிக்டாக் சேவை நிறுத்தம்: தேசிய தடை விதிக்கப்படுவதற்கு முன்பு எந்த நடவடிக்கையும்…

பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் – என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - May 26, 2025 0
இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ”பாகிஸ்தானை வளர்த்துவிடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *