கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் – என்ன சொன்னார்?

160 0

#ajithkumar #thala #ak #ajith #thalaajith #valimai #thalapathy #vijay #kollywood #thunivu #ajithfans #tamilcinema #thalaajithkumar #thalafans #tamilmemes #ajithkumarfans #viswasam #dhanush #tamil #trending #yuvan #thalapathyvijay #memes #ajithshalini #ajithism #ajithfansclub #love #suriya #nayanthara #sivakarthikeyan

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தனிநபர் பொறுப்பல்ல என்றும், அனைவரும்தான் பொறுப்பு என்றும் அஜித் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது கார் ரேஸிங்கில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், இவர் தற்போது தனியார் ஆங்கில யூ டியூப் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அதில் பல விஷயங்கள் குறித்து அஜித் பேசினார். அதில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது,

கூட்ட நெரிசலுக்கு யார் பொறுப்பு?

தமிழ்நாட்டில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்துள்ளது. அது தனி ஒரு நபரின் பொறுப்பல்ல. நம் அனைவரும் அதற்கு பொறுப்பு ஆவோம். ஊடகத்திற்கும் இதில் பங்கு உள்ளது. இன்று கூட்டத்தை கூட்டுவதை விரும்புவதாக நினைக்கிறேன். இது முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளிலும் கூட்டம் வருகிறது. திரையரங்கில் மட்டும் இது நடப்பது ஏன்? பிரபலங்களுக்கு மட்டும் இது நடப்பது ஏன்? இது திரையுலகையே உலகத்திற்கு மோசமாக காட்டும்.

இவ்வாறு அஜித் அதில் பேசியுள்ளார்.

கரூர் துயர சம்பவம்:

அஜித் தனது பேட்டியில் ரசிகர்களுக்கு பல வேண்டுகோள்களை முன்வைத்ததுடன், சில விஷயங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் கரூர் விவகாரம் அணையா நெருப்பாக மாறியுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வாழ்க்கையை இது மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் அழைத்து பேசியதும் விமர்சனத்தை எழுப்பியது. இந்த சூழலில், மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையை திடகாத்திரமாக விஜய் தொடங்க உள்ள சூழலில் அஜித் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தனி நபர் பொறுப்பாக முடியாது என்று கூறியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தமிழக அரசியலில் தாக்கம்:

அஜித்தின் இந்த கருத்து தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்பட்டுள்ள விஜய்க்கு நிகரான ஒரே போட்டி நடிகர் அஜித் ஆவார். தமிழக வெற்றிக் கழகம் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

அஜித் தனக்கு அரசியலில் வரும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தாலும், அவரது ஒவ்வொரு கருத்துக்களும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி வருகிறது. விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அவருக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை சமீபகாலத்தில் தொடர்ந்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Post

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

Posted by - July 1, 2023 0
அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

Posted by - March 24, 2025 0
மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு…

அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

Posted by - January 6, 2024 0
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *