கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

152 0

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் தான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா, அவரது மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமையாக வந்தார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை, கட்சிக்குள் ஏற்பட்ட நிகழ்வு போன்றவை காரணமாக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 5 ஆண்டுகாலம் பொறுமையாக இருந்த அவர், தற்போது கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். பெயர் அறிவிக்கப்படாத நிலையில், கொடி மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சசிகலாவிடம், “நீங்கள் அரசு ஊழியர் கிடையாது.  ஆனால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள். ஜெயலலிதாவோடு இருந்த தொடர்பை பயன்படுத்தி இன்றளவும் செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?”என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ இது திட்டம் போட்டு வெளியில் இருந்து பரப்பப்படும் விஷயமாகும். ஜெயலலிதா 1991-1996ம் ஆண்டு காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்தார். அப்போது ரூ.1 சம்பளம் பெறுவேன் என கூறியதையே கொச்சைப்படுத்தினார்கள். 1 ரூபாய் வாங்கி என்ன பண்ணுவாங்க என தெரிவித்தார்கள். நாங்கள் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு முன்னால் சில நிறுவனங்களை நடத்தி வந்தோம். அதில் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்து வந்தோம்.

அப்போது திமுக அரசு 13 வழக்குகள் போட்டது. அதற்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இரண்டுக்கும் வழக்கு நடத்த பணம் செலவழிக்க வேண்டும். இதற்கான பணம் எங்கள் நிறுவனங்களில் இருந்து தான் சென்றது. வருமான வரித்துறை தாக்கலில் எதற்கெல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியும். நான் ஒரு அரசு ஊழியர் கிடையாது. தனிப்பட்ட நபர். நான் ஒரு நிறுவனத்தை நடத்தக்கூடாது என எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தனியாக தொழில் செய்யவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்.

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை இந்த வழக்கில் இணைத்து விட்டார். ஒரு அரசு ஊழியர் ஊழல் செய்து விட்டார் என வழக்கு தொடர்ந்தால் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் சிக்க வைக்கப்படலாமா?, குடும்ப உறுப்பினர்களால் தனியாக சம்பாதிக்க முடியாதா?

நான் நடத்திய நிறுவனங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வரவு -செலவுகளை மேற்கொண்டோம். யாருக்கும் இப்படி வழக்கு போடவில்லை. இவை அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டவை. சசிகலா உடன் இருப்பதால் தான் இவ்வளவு சிக்கல். இல்லாவிட்டால் திமுக தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம் என கருணாநிதி நினைத்தார்” என சசிகலா கூறியுள்ளார்.

Related Post

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்

Posted by - December 11, 2025 0
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில்,…

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - April 9, 2026 0
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல…

“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

Posted by - April 23, 2026 0
மேட்டூர்: “வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி,…

எங்களைத் தாண்டி தொடுங்க.. விஜய்க்காக களமிறங்கப்போகும் அதிமுக! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்

Posted by - October 6, 2025 0
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை காவல்துறையினர் கைது செய்தால் அவருக்காக அதிமுக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *