எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!

82 0

ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகளில் ஒரு பதவியை அண்ணாமலைக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.

தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தலைவர் பதவியில் இருந்து இவர் மாற்றப்பட்டது முதலே பெரியளவு பிரதிநிதித்துவம் இல்லாமலே இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி அவரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

ஆந்திராவில் காலியாகும் 4 ராஜ்யசபா எம்பி:

இந்த சூழலில், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு தித்திக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஜுன் 21ம் தேதியுடன் 3 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள், ஒரு தெலுங்கு தேசம் எம்பி என மொத்தம் 4 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 4  மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியும் தெலுங்கு தேசம் கட்சி வசமே செல்கிறது. இதையடுத்து, 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை தெலுங்கு தேசம் கட்சியே வைத்துக்கொண்டு, மற்ற 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.

அண்ணாமலைக்கு எம்பி பதவி?

பாஜக-விற்கு வழங்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அண்ணாமலைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. இதனால், அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சிவிக்கும் வகையிலும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கும் வகையிலும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக-விற்கு அந்த எம்பி சீட்டை தெலுங்கு தேசம் வழங்கினாலும், ஆந்திர பாஜக நிர்வாகிகள் அந்த எம்பி சீட்டை அண்ணாமலைக்கு தர ஒப்புக்கொள்வார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய இடங்களிலும் பாஜக-விற்கு ஆதரவாக கடந்த தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டாபோட்டி:

தெலுங்கு தேசம் கட்சி சார்பின் சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒரு பதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் நண்பர் சனா சதீஷிற்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஒரு பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே மல்லுகட்டு நடந்து வருகிறது. அதேபோல, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியிலும் எம்பி  பதவியை கைப்பற்ற கடும் போட்டி நடந்து வருகிறது.

Related Post

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…

ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் – தவெகவின் தரமான சம்பவம்

Posted by - March 5, 2025 0
பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார் மாநில அரசுகளுக்கு உரிய…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

Posted by - June 10, 2023 0
பெங்களூரு : பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,…

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: கோழிக்கோட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து,…

மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

Posted by - July 3, 2023 0
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *