Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்..

62 0

Exit Poll Results: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டை விரிவாக காணலாம்.

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மே4 ஆம் தேதி வெளியாகவுள்ளது, அதற்கு முன்னர் மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ள்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தான், நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டை விரிவாக காணலாம்.

தமிழ்நாடு தேர்தல் 2021:

2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் அப்போது எதிர்க்கட்சியாக திமுகவிற்கு மிக முக்கிய தேர்தலாக இருந்தது, ஏன்னென்றால் அப்போதைய காலக்கட்டத்தில் அதிமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் இருந்தது மட்டுமில்லாமல், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாமல் மு.க. ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலாக இது இருந்தது. மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தன்குளம் லாக் ஆப் கொலை ஆகிய சில நிகழ்வுகள் அதிமுகவுக்கு எதிரான அலையாய் இருந்தது, கருணநிதியின் மறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றினார் என்றே சொல்லாம். இதனால் 10 ஆண்டுக்கால எதிர்ப்பு வாக்குகள்  எந்த அளவுக்கு செல்லும் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பதை காண மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொன்னது என்ன?

மொத்தம் 234 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட கணிசமாக அதிகமாக, திமுக கூட்டணி 160 முதல் 190 இடங்களை வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்தன.

ஆக்சிஸ் மை இந்தியா போன்ற கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 175-195 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 38-54 இடங்களும் கிடைக்கும் என கணித்து இருந்தது.  இது மட்டுமில்லாமல் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி 160+ இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கணித்து இருந்தன.

உண்மையான கருத்துக்கணிப்புகள்:

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ​​கருத்துக் கணிப்பாளர்கள் கணித்திருந்தபடியே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியானது. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகளுக்கு மிக நெருக்கமாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது. அதேசமயம், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 75 இடங்களைப் பெற்றன.

இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால் திமுக தனித்து 133 இடங்களில் வெற்றி பெற்று, 25 ஆண்டுகளில் முதல் முறையாக தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது

2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்காகக் மக்கள் ஆர்வமுடம்  காத்திருக்கும் வேளையில், கடந்த தேர்தல் கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவுகளுடன் பெருமளவில் பொருந்தியிருந்தது. இருப்பினும், இம்முறை கருத்துக் கணிப்பாளர்களால் அந்தத் துல்லியத்தை மீண்டும் வெளிப்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Post

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

Posted by - April 13, 2026 0
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர்…

”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

Posted by - July 28, 2025 0
Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். Seeman On Vijay: சொந்த…

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

Posted by - April 22, 2026 0
சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்…

மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?

Posted by - December 10, 2025 0
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *