வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

310 0

pதொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,  பஸ்ஸில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? ஓசி பஸ்ஸில் போகிறீர்கள் என சொல்லி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

அந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர்களும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.  இதை அடுத்து விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடியிடம் பெண்கள் குறைகளை கூறிய போது , இந்த கிராமத்தில் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. பெருசா கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க.. என்று அதட்ட,   பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறை சொல்லிய ஒரு பெண்ணை வாயை மூடிக்கிட்டு இரு என்றுஅமைச்சர் பொன்முடி அதட்டியதால் சலசலப்பு எழுந்திருக்கிறது.

pon

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசிய போது, நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன.  பல பணிகள் நடக்கின்றன.  கிராமங்களிலும் நகரங்களிலும் பல பணிகள் நடந்து வருகின்றன.  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் நேருவின் மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையாக இருந்தாலும் சரி , திருக்கோவிலூர் ஆக இருந்தாலும் சரி,  விழுப்புரம் ஆக இருந்தாலும் சரி… என்று அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு பெண் எழுந்து குறைகளைச் சொன்னார்.  அவரை பார்த்து கேலி செய்த அமைச்சர் பொன்முடி,   ‘’வாயை மூடிக்கிட்டுரு..’’ என்று அதட்டினார்.  பின்னர் அந்த பெண்ணிடம்,  ’’உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா?’’ என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் சொன்ன பதிலை கேட்ட பின்னர்,  ’’போயிட்டாரா.. பாவம்..’’ என சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்போது தொண்டர்கள் சத்தம் போடத் துவங்கினர்.  உடனே அமைச்சர் பொன்முடி , அமைதியாக இருக்கும் படி கூறி,  அந்த அம்மா குறை சொல்லுது நல்லது தானே என சொல்லி சமாளித்து தன் பேச்சை தொடர்ந்தார்.

Related Post

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

Posted by - June 7, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.? நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5…

நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

Posted by - September 20, 2023 0
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு,…

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்?

Posted by - February 19, 2024 0
2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள …

CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

Posted by - June 10, 2025 0
 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க…

இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *