”சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது…” எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

233 0

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார்.

சட்டமன்றத்தில் நாளை பட்ஜெட் மீதான விவாதமும், 29ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குதல், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிடட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார். எதிர்க்கட்சிகள் என்றால் அவையில் விமர்சிக்கத் தான் செய்வார்கள் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வாறு விமர்சிக்கும் போது திமுக உறுப்பினர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், மூத்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், என்ன பேச வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக பேச வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி வேண்டாம் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

Related Post

SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்

Posted by - December 11, 2025 0
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில்,…

இனி, இதை செய்யவேக் கூடாது! தவெக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட விஜய்..

Posted by - June 24, 2025 0
தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்தார். சென்னை வில்லிவாக்கத்தில் தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து…

’’அமைச்சர் பொன்முடிக்கு பட்டை நாமம்’’- பதவியை பறித்த முதல்வர் ஸ்டாலின்- இதுதான் காரணமா?

Posted by - April 11, 2025 0
திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழக…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது

Posted by - December 20, 2025 0
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *