கடைசி பந்து வரை உச்சக்கட்ட பரபரப்பு… 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது தல தோனி படை..!

385 0

மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்று சாதித்தது. இதன்மூலம், தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக மகுடம் சூடி சாதனை நிகழ்த்தியது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, மாற்று நாளான நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளும் மழைக்கு வாய்ப்பிருந்ததால் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் கண்ட குஜராத் அணியில், தொடக்க வீரர் ஷுப்மன் கில் 3 ரன்கள் சேர்த்திருந்த போது, தேஷ்பாண்டே ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இதையடுத்து தனது அதிரடியை தொடர்ந்த ஷுப்மன் கில், 39 ரன்கள் சேர்த்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றப்பட்டார்.

Related Post

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது – நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..

Posted by - September 16, 2025 0
ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட…

மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?

Posted by - April 10, 2025 0
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார்…

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

Posted by - December 8, 2022 0
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *