மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்று சாதித்தது. இதன்மூலம், தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக மகுடம் சூடி சாதனை நிகழ்த்தியது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, மாற்று நாளான நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளும் மழைக்கு வாய்ப்பிருந்ததால் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் கண்ட குஜராத் அணியில், தொடக்க வீரர் ஷுப்மன் கில் 3 ரன்கள் சேர்த்திருந்த போது, தேஷ்பாண்டே ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இதையடுத்து தனது அதிரடியை தொடர்ந்த ஷுப்மன் கில், 39 ரன்கள் சேர்த்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றப்பட்டார்.
