மருத்துவ குணம் மிகுந்த நீலகிரி பூண்டுக்கு அமோக கிராக்கி: கிலோ ரூ.140-க்கு கொள்முதல்

251 0

அரவேணு:

கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டது. எனவே நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.கொரோனாவால் நீலகிரி பூண்டுக்கு மவுசு அதிகரிப்பு | Nilgiri garlic people and  merchants wanted

கோத்தகிரியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால், பூண்டு பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதற்கு போதிய கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறுகையில், நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது.

2-ம் போகத்தில் அறுவடையாகும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே 2-ம் போகத்தில் விளையும் பூண்டு விதைகளை, நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். நீலகிரி பூண்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலை கிடைத்தது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டுக்கு, தற்போது ரூ.120 முதல் ரூ.140 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. நீலகிரி பூண்டுக்கான கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

 

 

 

 

 

Related Post

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - March 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

மிக்ஜாம் புயல் பாதிப்பு : முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அனுப்புவது எப்படி? – முழுவிபரம் இதோ

Posted by - December 8, 2023 0
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட தமிழக அரசு…

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Posted by - March 18, 2023 0
1/ 5 தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2/ 5 நேற்று தங்கம் விலை…

உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவும் பார்சுவ பகாசனம்

Posted by - March 2, 2023 0
வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள்.…

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

Posted by - January 16, 2025 0
இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி! திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *