எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

337 0

80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு ஆர்வத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.

கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

அப்பத்தாவின் 40% சொத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஜீவானந்தம் மீது ஆதிகுணசேகரனும் அவரது தம்பிகளும் கொலை வெறியில் இருக்கிறார்கள். சொத்துக்காக இல்லாவிட்டாலும் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துக் கொள்ள ஜனனியும் அவரது அக்காக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இத்தனை நாள் சுயநினைவின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பத்தா நேற்று கண் விழித்ததோடு எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவருக்கு நினைவு வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்ள குடும்பத்தினர் அனைவரும் பேச்சு கொடுத்தனர். ஆனால் எப்போதும் போல் குணசேகரன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அவரை சமாளிக்க நந்தினியும், ரேணுகாவும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மனுஷன் விடுவதாய் இல்லை. இன்றைய எபிசோடிலும் அது தொடர்கிறது. இருக்கிற எல்லா பெண்களும் கிரிமினலாய் இருந்தால் என்ன செய்வது? 80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என ஆக்ரோஷமாக கத்துகிறார் குணசேகரன்.

மறுபுறம் ஜனனி தனியாக ஜீவானந்தத்தை சந்திக்க சென்றிருக்கிறாள். இன்னொரு பக்கம் கிள்ளி வளவனும் கதிரும் அவர் கதையை முடிக்க வெறி கொண்டு அலைகிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பார்க்க வீட்டிற்கு வந்து விட்டார் ஜீவானந்தம். தன்னை தேடுபவர்களிடம் அகப்படுவாரா அல்லது எஸ்கேப் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

வெற்றிலையின் 10 அற்புத நன்மைகள் தெரியமா?

Posted by - July 5, 2024 0
கடுமையான காரம் போன்ற சுவையை கொண்டிருக்கும் வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் சேர்த்து போடும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய…

தண்டுவடத்தை வலுவாக்கும் தண்டயமன தனுராசனம்

Posted by - February 21, 2023 0
உடலை வில் போன்று வளைக்கும் ஆசனம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தண்டுவடத்தை வலுவாக்கும், உடல் முழுவதும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி தசைகளை உறுதி செய்யும் தனுசாரத்தின் மற்றொரு வகை…

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்.. 5ம் சீசனில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - February 24, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவில் கலந்துகொண்ட பல…

காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

Posted by - February 16, 2023 0
டிஆர்பி-யில் டாப் 10 இடத்தில் இருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும்…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *