கொலை மிரட்டல் விடுக்கும் என்ஜினீயர்.. பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி

193 0

கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.

ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர். கட்டுமான பணிகள் செய்வதற்காக பாபிசிம்ஹாவிடம் ஜமீர் ரூ.1. கோடியே 70 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.கொடைக்கானல் பங்களாவுக்கு அனுமதியின்றி ஜேசிபி, வெடிமருந்து.. பாபி சிம்ஹா  மீது நண்பர் விதிமீறல் புகார் | Bobby Simha's friend accuses that the actor  built kodaikanal ...

பணிகள் பாதியில் நிற்கவே இதுகுறித்து ஜமீரிடம் கேட்டபோது கூடுதலாக பணம் கொடுத்தால்தான் வீட்டை கட்டி முடிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி சென்றதால் பாபிசிம்ஹா அதிர்ச்சிஅடைந்தார். இதையடுத்து ஜமீர், உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது பாபிசிம்ஹா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாபிசிம்ஹா கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது, ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால்தான் ஜமீருக்கு வீடுகட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ரூ.1.70 கோடி பணம் வாங்கி கொண்டு தரமற்ற கட்டிடப்பணிகளை செய்துள்ளனர்.

பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் கொடுக்கவில்லை. முறைகேடு செய்தது குறித்து கேட்டபோது உள்ளூர் மக்களை திரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஒரு நடிகரான எனக்கே இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும். என சந்தேகம் எழுந்துள்ளது.

பலமற்ற தரைத்தளம்,செட் அமைத்தது போல கட்டிட பணிகளை மோசமான நிலையில் கட்டி கொடுத்துள்ளனர். இதனை நான் புகாராக தெரிவித்தால் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர உள்ளேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். 30 வருடமாக வசித்து வரும் தன்னை கொடைக்கானலை சேர்ந்த சிலர் சமூகஆர்வலர் என்ற பெயரில் கூறிக்கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

ஜனநாயகன் படத்தின் கதை இதுதான்…

Posted by - December 30, 2025 0
சென்னை : ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம்…

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. லோகேஷ் வெளியிட்ட மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted by - December 21, 2024 0
Mr Bhaarath First Look Poster: இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து…

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - September 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்… லிஸ்ட் இதோ

Posted by - September 12, 2025 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இன்றைய கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து காட்டியுள்ளார். கடந்த வருடம்…

மூன்று நாட்களில் மாரீசன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 28, 2025 0
மாரீசன் மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டு இருக்கிறார் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் மாரீசன். மாமன்னன் படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *