தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

187 0

டெல்லி:

உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

உடல் பருமனைக் குறைக்க எப்போதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் கூட உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதற்கு நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருந்தால் போதும். சில வகை உணவுகள் எடை குறைப்பு பயணத்தைத் தாமதமாக்கும். அத்துடன் கொழுப்பை ஏற்படுத்தும் சில உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், மீண்டும் எடை கூடிவிடும் ஆபத்தும் இருக்கிறது.தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய  பிரச்சினையாகிடும் | What are the five food combinations that need to avoid  at all costs for ...

உடல் எடை:

இந்த குறிப்பிட்ட உணவுகளை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் போதும் உடல் எடை மளமளவென குறையும். அதேபோல நீங்கள் சமைக்கும் போது எப்படிச் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உணவின் சுமை மட்டுமில்லை, உடல் எடையையும் கூட இது மாற்றும். நீங்கள் சமைக்கும் முறையும் கூட உணவில் இருக்கும் கலோரி எண்ணிக்கையை மாற்றும்..

அதாவது ஒரு காய்கறி அல்லது அசைவ உணவை டீப் ஃப்ரை செய்தால் அதன் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரம் வேகவைத்துச் சாப்பிட்டால் கலோரி எண்ணிக்கை குறையும். மேலும், உணவை டேஸ்ட் ஆன ஒன்றாக மாற்ற அதில் எலுமிச்சை, தேன், பேரீச்சம்பழம், உலர் பழங்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இது உணவின் சுவையையும் கூட்டும் உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

அரிசி & உருளைக்கிழங்கு:

அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது. இதனால் அரிசி சாதத்தை அதிகம் சாப்பிட்டால் அது உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாக அமையும். அரிசி எளிதில் ஜீரணிக்கக்கூடியது தான் என்றாலும் அதை அளவாகச் சாப்பிட வேண்டும். அரிசி சாதம் சாப்பிடும் போது அத்துடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.

அவை இரண்டும் உடலுக்குக் கொழுப்பைத் தரும். உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. அதை அரிசி சாதத்துடன் சாப்பிடும் உடலில் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இந்த இரண்டு உணவுகளை நிச்சயம் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது.

ரொட்டி மற்றும் தயிர்:

பெரும்பாலும் எதாவது அவசரம் என்றால் நாம் ரொட்டி மற்றும் தயிரைத் தான் சாப்பிடுவோம், ரொட்டி என்பது மைதாவில் இருந்து செய்யப்பட்டது. அதில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் மைதா ரொட்டியை தான் முதலில் தவிர்க்க வேண்டும். அதேபோல ரொட்டி சாப்பிடும் போது தயிரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

அதுவும் நமது உடல் எடையை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. சில நேரங்களில் அதிகளவில் புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் அதுவும் கூட செரிமான அமைப்பைக் குழப்பம். இதுவும் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும். எனவே, நீங்கள் சிக்கன் மற்றும் பருப்பு உள்ளிட்ட புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை ஒன்றாகச் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் இது உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும்.

கண்டிப்பாகக் கூடாது:

தின்பண்டங்கள் மற்றும் டீ, காபி ஆகிய இரண்டையும் ஒன்றாகக் குடிக்க வேண்டாம். இந்த இரண்டையும் நாம் ஒன்றாகச் சாப்பிட்டால் அது வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி பிஸ்கட்கள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகமாக இருப்பதால், அவை உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். தின்பண்டங்களை நீங்கள் தவிர்க்காவிட்டால் உடல் எடையை உங்களால் குறைக்கவே முடியாது.

பால் மற்றும் வாழைப்பழம்:

இந்த இரண்டிலும் அற்புதமான ஊட்டச்சத்து இருக்கிறது. இருப்பினும், இந்த இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால், அது உடலில் இருக்கும் சத்துக்களை காலி செய்துவிடும். மேலும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, பால் மற்றும் தயிர் என இரண்டையும் சாப்பிட விரும்பினால் குறைந்தது 20-30 நிமிடங்கள் கேப் விடுவது நல்லது.

Related Post

எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு – இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

Posted by - February 22, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மேலும் ஒரு உரிமையை பறிக்கும் விதமாக சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பு…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள்

Posted by - August 12, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.…

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Posted by - April 15, 2024 0
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ்…

தளபதிக்கு “தல” கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!

Posted by - January 15, 2025 0
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்திற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *