நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் நேற்று இரவு முதல் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், 450 ஆண்டுகள் பழமையான சென்னை சாந்தோம் தேவாலயத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபம் காட்சிப்படுத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது.