#NellaiWelcomesTHALAPATHY pic.twitter.com/oxXyD3SuJr
— RAJA S (@Raja01_Tvk) December 30, 2023
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. எதிர்பாராத அளவிற்கு மழை இந்த மழையால், நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்தது. அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.

இதனால் அங்கு வசித்த மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அரசு சார்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டாலும், பல இடங்களில் உதவிகள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். அரசு மட்டுமல்லாமல் இதர கட்சி நிர்வாகிகளும் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, உதவிகளை செய்தார். நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு வந்திருந்த மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கிய விஜய் அங்குள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவருடனும் செல்ஃபி எடுத்தார்.
இதனால் அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சி கடலில் பொங்கினர். இறுதியாக அங்கிருந்த தன்னுடைய ரசிகர்களுடன் ஒரு செல்ஃபி வீடியோவும் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது!