#seeman #ntk #vivasayi #vigneshsivan #nayanthara #pixeltv #pixelmedia #tamilcinema #tamillive #tamilnews
நாம் தமிழர் கட்சி தலைவரும், முன்னாள் இயக்குநர் கம் நடிகருமான சீமான் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவனின் புதிய படத்திலும் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைவரும், முன்னாள் இயக்குநர் கம் நடிகருமான சீமான் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவனின் புதிய படத்திலும் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் அஜித்தை இயக்குவதாகவும், லைகா அப்படத்தை தயாரிப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பதாக கூறப்பட்டது. அதுவும் கைவிடப்பட்டு, கடைசியில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்க முன் வந்தது.இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். இசை அனிருத். படத்துக்கு எல்ஐசி (லவ் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. “இது நான் பதிவு செய்திருக்கும் பெயர். இதனை மாற்றாவிட்டால் வழக்குத் தொடுப்பேன்” என்று இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் எச்சரிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.எல்ஐசி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக விவசாயி வேடத்தில் சீமான் நடித்ததாகவும், இந்த கதாபாத்திரத்துக்காகவே அவர் தாடி வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பிலிருந்து எதிர்பார்க்கலாம்.