கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பதுண்டு. பாண்டி என்றால் குளிக்காதவன், சுத்தமில்லாதவன், படிக்காதவன், நாகரிகமில்லாதவன் என்று பல பொருள்கள் உண்டு. ஆகவே, அது நகைப்புக்குரிய பெயராக மலையாளிகள் மத்தியில் நிலவுகிறது.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், ஜீ.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் ரெபல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பதுண்டு. பாண்டி என்றால் குளிக்காதவன், சுத்தமில்லாதவன், படிக்காதவன், நாகரிகமில்லாதவன் என்று பல பொருள்கள் உண்டு. ஆகவே, அது நகைப்புக்குரிய பெயராக மலையாளிகள் மத்தியில் நிலவுகிறது.
சமீபத்தில் வெளியான தமிழ்ப்பட ட்ரெய்லர்களில், மொழிப் பிரச்சனையை தொட்டுச் சென்றவிதத்தில் ரெபல் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. படமும் பேசப்படும் படமாக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் இருந்து உணர முடிகிறது.