CSK அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல் – புதிய கேப்டன் யார் தெரியுமா..?

211 0

13 வருடங்களாக சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 13 வருடங்களாக சிஎஸ்கே ஆஸ்தான கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ். தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கோப்பையை வைத்து எடுக்கப்பட்ட குழு படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அந்த குழு புகைப்படத்தை சென்னை அணியின் கேப்டன் ஸ்தானத்தில் எம்.எஸ்.தோனிக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் நிற்கிறார். இதனால் ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் வெல்கம் நியூ கேப்டன் ஆப் சிஎஸ்கே என ருதுராஜை வரவேற்றுள்ளனர்.ஏற்கனவே தல தோனி இந்த தொடருடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து 13 வருடங்களாக ஒரு சிங்கம் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய எம்.எஸ்.தோனி அவர்களுக்கு பிக் சலூட் என ரசிகர்கள் அனைவரும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Related Post

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!

Posted by - April 25, 2025 0
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. சின்னசாமி மைதானத்தில்…

நீங்களே இப்படி பண்ணலாமா.. போட்டிக்கு நடுவே காவ்யா மாறன் எடுத்த முடிவு.. இத கவனிச்சீங்களா..

Posted by - May 27, 2024 0
17 வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக…

18 வருட காத்திருப்பு ஓவர் -? ஃபைனலில் பெங்களூரு – பஞ்சாப்

Posted by - June 2, 2025 0
18 வருட காத்திருப்பை முடித்து முதல் கோப்பையை வெல்லப்போவாது யார் என்பது? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பந்தாடிய பஞ்சாப்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *