“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

225 0

ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இது குறித்து அவர்களே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர். பிரிந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தில் மீண்டும் இருவரும் இணைவார்கள் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் ஆரோக்கியமான உடல் + மகிழ்ச்சியான மனம் + மனித இதயம் = அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மந்திர மருந்து என்ற கேப்சனுடன் ஃபிட்னஸ் தொடர்பான கார்டு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில் தினமும் 9 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும், 8 மணிநேரம் தூங்க வேண்டும், 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 6 நிமிடம் தியானம், 5 நேரங்களில் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும், 4 பிரேக் எடுக்க வேண்டும், 3 முறை ஆரோக்கியமான உணவு, நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும், தூங்கும் முன்பு 2 மணிநேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது, 1 முழு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர்கள் இணைவது தொடர்பாக ஏதேனும் பதிவிட்டிருப்பார் என எண்ணியதாகவும் அவர்களது பிரிவு கவலை அளிப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

போலி இமெயில் முகவரி அனுப்பி சேலம் இரும்பு வியாபாரியிடம் ரூ.71.93 லட்சம் மோசடி

Posted by - August 2, 2023 0
சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி. இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம்…

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - January 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம்.. ஓபனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

Posted by - December 18, 2024 0
ஜெயம் ரவி ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி கலக்கிவரும் நடிகர் ரவி. முதல் படம் வெற்றி கொடுக்க ஜெயம் ரவி என்று தனது பெயரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *