மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை… ரோஹித் சர்மா சதம் வீண்!!

204 0

ரோஹித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

தொடக்க வீரர் அஜிங்யா ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் தலா 5 சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி 69 ரன்கள் எடுத்தார்.

ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்க்க, 6 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தோனி, கடைசி ஓவரை எதிர்கொண்டார். இந்த ஓவரை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வீச, அதன் 3,4 மற்றும் 5 ஆவது பந்துகளை சிக்சருக்கு விளாசினார் தோனி. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 206 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இஷான் கிஷன் 23 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

திலக் வர்மா 31 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களும், டிம் டேவிட் 13 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Related Post

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”

Posted by - November 12, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக, ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய சலுகைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடிய தோனி… வைரலாகும் புகைப்படம்

Posted by - May 30, 2023 0
கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10…

தோனி மீது பதிவான 10 புகார்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்… காரணம் இதுதான்…!

Posted by - May 18, 2023 0
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. விளம்பர விதிமுறைகளை மீறியதாக தோனி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *