“நான் இப்படி செய்வனோ..?” – ஜி.கே.மணி உருக்கம்

197 0

45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜி.கே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள்.

விழுப்புரம்: பாமக ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது, விரைவில் ராமதாஸ், அன்புமணி சந்தித்து பேசுவார்கள். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற வரும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த கௌரவ தலைவர் ஜிகே.மணி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 21 மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர், மகளிர் அணி மாநில செயலாளர்கள் ஐந்து பேர், தலைவர் ஒருவர் உட்பட 13 மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே.மணி. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன். பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுவையில்:

தமிழ்நாட்டில் பாமக, வன்னியர் சங்க ஆகியவை வலிமையான அமைப்பு. அந்த வலிமை எப்படி என்பதை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்துள்ளது. உட்கட்சியில் சலசலப்பு ஏற்படுவது இயல்புதான். அப்படி பாட்டாளி மக்கள் கட்சியில் இன்றைக்கு ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. பாமக என்பது ஒரு குடும்ப பாசத்தோடு உள்ள கட்சி இந்த கட்சியில் நெருக்கடி ஏற்பட்டால் விரைவில் சுமூக தீர்ப்பு தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. நேற்று இரவு வரை மருத்துவர் ராமதாஸிடம் பேசியுள்ளேன், அதேபோல மருத்துவர் அன்புமணியிடமும் பேசிய உள்ளேன். என் ஆசையும், நோக்கமும் சுமூகமான தீர்வு மிக விரைவில் வரவேண்டும் என்பதுதான். பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை மேலும் அதிகரித்து மிக விரைவில் வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான். அதற்குண்டான முயற்சியை ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் சுமூக தீர்வு வரும் என்ற நம்பிக்கையோடு முயற்சி எடுத்து வருகிறேன். இருவரும் ஒன்றாக சந்திப்பார்கள் பேசுவார்கள் நிறைய விரைவில் நல்ல செய்தி வரும். கட்சி விவகாரத்தை பொதுவெளியில் சொல்லக்கூடாது.

அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் கருத்து மோதலுக்கு ஜி.கே.மணி தான் காரணம் என பொதுவெளியில் பேசப்படுவது குறித்த கேள்விக்கு:

என்னை விஷம் கொடுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்வதற்கு சமமானது இந்த கேள்வி. 45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜிகே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வாய்ப்புகள் வந்தன அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தான் இங்கு இருக்கிறேன். மிக விரைவில் ராமதாசும், அன்புமணியும் சந்திப்பார்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என இருவரிடமும் பேசி உள்ளேன் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கூட்டணி அமைப்பது தொடர்பாக எல்லாம் இந்த முரண்பாடும் இல்லை. தேர்தலுக்கு முன்பாக இருவரும் சந்தித்து பேசுவார்கள், நல்ல கூட்டணி அமையும். பாமக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை பாமக உருவாக்கி காட்டும். ஜிகே மணியை பொறுத்தவரை உண்மையாக இருப்பேன் சுவாசமாக இருப்பேன் என்றார்.

Related Post

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!

Posted by - April 1, 2026 0
புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்’ வைத்த காவல்துறை? 19 இடங்களுக்கு அனுமதி மறுப்பு! புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - April 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…

“நானும் முருக பக்தன்தான்” திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?

Posted by - June 19, 2025 0
மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த அழைப்பு குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமா பதில் அளித்துள்ளார். பள்ளிக்காலத்தில் தானும் முருகனை வழிபட்டு பக்தனாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *