சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

63 0

சென்னை: தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர்.

சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

அவரை ஜாமீனில் விடுவிக்​கக் ​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது. அன்​றைய​தினம் அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத​தால், அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து போலீ​ஸார் தேடி வந்​தனர்.

பின்​னர் ஆந்​தி​ரா​வில் சவுக்கு சங்​கர் கடந்த வாரம் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் மீது குண்​டர் தடுப்பு சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே உடல்​நலக்​குறைவு காரண​மாக, சவுக்கு சங்​கரின் தாயார் கமலா நேற்று முன்​தினம் கால​மா​னார். பெங்​களூரு வில்​சன் கார்​டன் மின் மயானத்​தில் நேற்று நடை​பெற இருந்த தயாரின் இறு​திச் சடங்​கில், பங்​கேற்க சவுக்கு சங்​கருக்கு ஏப்​.13 இரவு 8 மணி முதல் ஏப்​.16 இரவு 8 மணி வரை பரோல் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து தாயார் கமலா​வின் இறு​திச் சடங்​கில் சவுக்கு சங்​கர் கலந்து கொண்​டார். சவுக்கு சங்​கரின் தாயார் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: யூடியூபர் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா உடல்​நலக்​ குறை​வால் கால​மான செய்​தி​யறிந்து மிகுந்த துயருற்​றேன்.

தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்​துக்​காக, காவல் ​துறை​யால், திமுக மற்​றும் கூட்​டணி கட்சி குண்​டர்​களால் அவர் சந்​தித்த துயரங்​கள் ஏராளம். தாயை இழந்து வாடும் சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்​கள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சவுக்கு சங்​கரின் தாயார் மறைவு செய்​தி​கேட்டு வருத்​தம் அடைந்​தேன். இந்த கடின நேரத்​தில் சவுக்கு சங்​கரின் குடும்​பத்​தினருக்கு என் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்​கரின் தாயார் கால​மான செய்தி வருத்​தத்​தை​ அளிக்​கிறது. சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: சவுக்கு சங்​கரின் தா​யார் மறைந்த செய்​தி​யறிந்து ஆழ்ந்த மனத்​துயர் அடைந்​தேன். சவுக்கு சங்​கருக்கு எனது ஆறு​தலை தெரி​வித்​துக் கொள்கிறேன்.

Related Post

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!

Posted by - November 3, 2023 0
இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Posted by - March 18, 2023 0
1/ 5 தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2/ 5 நேற்று தங்கம் விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *