மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல் செய்யுங்க..

197 0

தினமும் காலை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் நெய் பத்தலை செய்யுங்கள்.

இந்த நெய் பத்தல் செய்வதற்கு மீந்து போன சாதம் இருந்தால் போதும். அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பத்தலை செய்யலாம். இந்த பத்தலை கேரளாவில் காலை உணவாக கேரளா மக்கள் சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த பத்தலை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?

உங்களுக்கு நெய் பத்தலை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் பத்தல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல்  செய்யுங்க.. | Simple Breakfast: Neypathal Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* மீந்து போன சாதம் – 1 கப்

* அரிசி மாவு – 1 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தேங்காய் – 1 1/2 கப் (துருவியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* சீரகம் – 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* நெய் – தேவையானஅளவு

செய்முறை:

* முதலில் சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவை சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் தேங்காய், வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்த மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் நெய் தடவி, இந்த உருண்டையை ஒவ்வொன்றாக வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், தட்டி வைத்துள்ள பத்தலைப் போட்டு, குறைவான தீயில் வைத்து, பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான கேரளாக ஸ்டைல் பத்தல் தயார்.

Related Post

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

இதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்.. தயாரிப்பாளர் காட்டம்

Posted by - April 27, 2023 0
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

டீ குடிப்பதில் புதிய கட்டுப்பாடு? உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 26, 2025 0
டீ குடிப்பதில் கவனம் தேவையா? இந்தியாவில் தினசரி வாழ்க்கையில் டீ ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. காலை முதல் இரவு வரை பலர் டீ குடிப்பதை…

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *