எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

343 0

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு உரத் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.

அந்த அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. நேற்று அமோனியா வாயு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படவில்லை.

தொழிற்சாலையில் வாயுக் கசிவு: உடல்நல பாதிப்புக்கு ஆளான மக்கள் @ எண்ணூர் | Gas  Leak from Factory breathe difficult Health Affected People Ennore -  hindutamil.in

இருந்தபோதிலும் குழாயில் அமோனியா திரவ வாயு தேங்கியிருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது.

இதனால் வாயு காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. . இதனால் மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மேலும், பெரிய குப்பம் மற்றும் அதன் அருகில் உள்ள மக்கள் பயத்தில் உரைந்து போனார்கள். பயந்து போன பொதுமக்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மூலம் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டதாக தனியார் நிறுவனம் தெரிவித்தள்ளது.

இந்த சம்பவம் மிகப்பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Related Post

”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Posted by - January 31, 2025 0
பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர்…

அரையாண்டு லீவ் முடிந்தது..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Posted by - January 2, 2023 0
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம்…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை..

Posted by - April 19, 2023 0
தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி…

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *