vvv

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

114 0

கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத் தொடங்கியுள்ளனர்.

Five State Election 2026: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 24 நாட்கள்தான்:

தமிழ்நாடு, மேற்கு வங்கம் தவிர மற்ற 3 மாநிலங்களுக்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் நடுப்பகுதி, இறுதிப்பகுதி அல்லது மே முதல் பாதியில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்கு மட்டும் ஏப்ரல் 9ம் தேதியே ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் வெறும் 24 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால், இந்த 3 மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழுவீச்சில் தீவிரப்படுத்தியுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்டிற்கும், காங்கிரசுக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்ற போட்டி எழுந்துள்ளது.

கேரளாவில் எப்படி?

கேரளத்தில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு கூட்டணியாக உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காங்கிரஸ், கேரள காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் தவிர பாஜக-வின் தாக்கம் இந்த தேர்தலில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பரப்புரையை நாளை முதல் தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

அசாம் நிலவரம்:

வடகிழக்கு மாநிலத்திலே மிகவும் முக்கியமான அசாமில் 126 தொகுதிகள் உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர வியூகம் வகுத்துள்ளது. என்டிஏ கூட்டணியில் அங்கு பாஜக, அசாம் கானா பரிஷத் மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சுதந்திர கட்சி கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையில் காங்கிரசுடன் ரய்சோர் தளம், அசாம் ஜதிய பரிஷத் கட்சி கூட்டணி அமைத்துள்ளனர். பாஜக-வை வீழ்த்த அங்குள்ள காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

பாண்டிச்சேரி:

யூனியன் பிரதேசமான தமிழர்கள் வாழும் பாண்டிச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளது. பாண்டிச்சேரியில் தற்போது என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு என்ஆர் காங்கிரசுடன் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்குகிறது. என்டிஏ – பாஜக – அதிமுக தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது.  திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது.

நாளை வேட்புமனுத் தாக்கல்:

இந்த 3 மாநிலங்களிலுமே வேட்புமனுத் தாக்கல் நாளையே ஆரம்பமாகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 23ம் தேதியே கடைசி நாள் ஆகும். இதனால், இன்னும் ஓரிரு தினங்களுக்குள் வேட்பாளர்களை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

Related Post

’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

Posted by - September 6, 2025 0
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு…
Gemini Generated Image p0wznkp0wznkp0wz

திருச்சியில் விஜய் வேட்பு மனு தாக்கல்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடல் 🔥 தமிழக அரசியல் சூடுபிடிக்குது!”

Posted by - April 2, 2026 0
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,திருச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,ஆதரவாளர்கள் திருச்சியில்…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…
vijay 2

விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

Posted by - March 31, 2026 0
திமுக சின்னம் உதய சூரியனுக்கு ஓட்டுப்போடச் சொன்ன தவெக விஜய்? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனுக்கு…
Generated Image February 09 2026 3 52PM

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *