’DMK FILES’

92 0

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக தேர்தல்- அதிமுகவின் புதிய வியூகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கநெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதுஅதிலும் முன் கூட்டியே தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறதுஇதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதுதற்போது வரை 4 முனை போட்டி தமிழகத்தில் உறுதியாகியுள்ளதுஇதில் திமுக– அதிமுக இடையிலான போட்டியால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளதுஇதில் முதல்கட்டமாக திமுக அமைச்சர்கள் மீது அதிமுக– பாஜக கூட்டணி குறிவைத்துள்ளது திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேடி தேடி எடுத்துள்ளது அதிமுக தலைமைஅந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை தயார் செய்துள்ளது.

அமைச்சர்கள் மீதான புகார்- தேடி எடுக்கும் அதிமுக

நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்ரவியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான பட்டியலை வழங்கினார்இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்56 மாதங்களாக வெளிப்படை தன்மை இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப் பெரிய கடன் சுமையில் திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார்

ஆளுநரிடம் ஆதாரங்களை கொடுத்த இபிஎஸ்

அந்த வகையில் பின்வரும் துறைகளில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  ₹64,000 கோடி
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ராஜ் துறை  ₹60,000 கோடி
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  ₹60,000 கோடி
  • மின்சாரத் துறை  ₹55,000 கோடி
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  ₹50,000 கோடி
  • பதிவுத் துறை  ₹20,000 கோடி
  • நெடுஞ்சாலைத் துறை  ₹20,000 கோடி
  • நீர்வளத் துறை  ₹17,000 கோடி
  • பெருநகர சென்னை மாநகராட்சி  ₹10,000 கோடி
  • தொழில் துறை  ₹8,000 கோடி
  • பள்ளிக் கல்வித் துறை  ₹5,000 கோடி
  • சமூக நலத் துறை  ₹5,000 கோடி
  • வேளாண்மைத் துறை  ₹5,000 கோடி
  • சுகாதாரத் துறை  ₹4,000 கோடி
  • உயர்கல்வித் துறை  ₹1,500 கோடி
  • இந்து சமய அறநிலையத் துறை  ₹1,000 கோடி
  • ஆதிதிராவிடர் நலத்துறை  ₹1,000 கோடி
  • சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  ₹750 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  ₹500 கோடி
  • சிறைத் துறை  ₹500 கோடி
  • சுற்றுலாத் துறை  ₹250 கோடி
  • பால்வள மேம்பாட்டுத் துறை  ₹250 கோடி

இந்த லட்சம் கோடி ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தவும்இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும்உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக முறைப்படி வலியுறுத்தியுள்ளது. “தமிழக மக்களுக்குத் தூய்மையான நிர்வாகம் கிடைக்க வேண்டும்பொதுப்பணத்தைப் பட்டப்பகலில் கொள்ளையடிப்பது தண்டிக்கப்படாமல் போகக்கூடாது,” என்று அதிமுக உறுதியுடன் தெரிவித்துள்ளது.

 இந்த பரபரப்பான நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர்திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று ஆளுநரிடம் வழங்கிய புகார் மனுவை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய பைல்களுடன் இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக ஆதாரங்களுடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்திருந்தார்அந்த ஆதாரங்களை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறதுஇந்த புகார் மீது விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

“ஆட்சியில் பங்கு குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள்” – ஆர்.எஸ்.பாரதி உறுதி!

Posted by - February 14, 2026 0
சென்னை: “கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து…

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா?

Posted by - February 28, 2026 0
அதிமுக-வால் ஓரங்கட்டப்பட்டு திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் ஆட்சி அமைந்தால் சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசி என்று மக்களால் அறியப்பட்டு…

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *