தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

293 0

சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.teacher protest

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்துவருகிறது.

Teachers Protest in Chennai: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். பல்வேறு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், உண்ணாவிரதம் குறித்து ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்திவருகின்றனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

முன்னதாக இது குறித்து பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட், “தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்” என்று உறுதிப்பட தெரிவித்தார்.

இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளியின் உத்தரவாதத்தை ஏற்க TET தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய TET தரப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Post

விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

Posted by - January 6, 2025 0
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவானது அரசு அனுமதி இன்றி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக வெற்றிக்…

பழனி கோவிலில் “கந்த சஷ்டி விழா” வருகிற 13-ந்தேதி தொடக்கம்: 18-ம் தேதி சூரசம்ஹாரம்

Posted by - October 28, 2023 0
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி…

15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

Posted by - January 22, 2025 0
பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள். என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம்…

இறுமாப்புடன் சொல்கிறேன்…. – தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி

Posted by - December 7, 2024 0
தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கடமை உணர்வோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் என திமுக…

அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *