15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

136 0

பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள்.

என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த மக்கள் பிரச்சினைக்கு பெரியாரியவாதிகள் முன் நின்றிருக்கிறார்கள். இதற்கு மட்டும் ஏன் வருகிறார்கள். 60 ஆண்டுகளாக நீங்கள் பெரியாரை வைத்துக்கொண்டு நீங்கள் காட்டும் படம் தேவையா?

தமிழகத்தின் 234 தொகுதிகளும் என் தொகுதி. இது என் நாடு. உண்மையான கம்யூனிசம், பெண்கள் உரிமை எங்களிடம்தான் உள்ளது. நீங்கள் வெறும் வெற்றுப்பேச்சு.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு துணிவு உள்ளதா? சமூக நீதி என்று பேசுகிறார்கள். ஜமுக்காள நீதி கூட கிடையாது. சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம் என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. கல்வியை பொதுப்பட்டியலில் கோரும் திமுக மத்திய அரசில் இருந்தபோது என்ன செய்தது?

பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள்.

பெரியார் குறித்து நான் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வழக்கு போட்டுள்ளீர்கள். தேவைப்படும்போது நானே நீதிமன்றத்தில் காட்டுவேன்.

இதே விஷயத்தை பல பேர் பேசியுள்ளனர். நான் பேசும்போது மட்டும்தான் கோவம் வருகிறது. கோட்டையை முற்றுகையிடுவது தமிழர் மரபு. வீட்டை முற்றுகையிடுவது திராவிட மரபு. என் வீட்டை அவர்கள் எங்கு முற்றுகையிட்டார்கள்? பெரியாரை அதிகமாக விமர்சித்தது திமுகதான்.

நாங்கள் எதற்கும் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. பிரபாகரனுடன் நான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. 15 வருடமாக எங்கே போனார். என்னிடம் நேரடியாக சொல்ல சொல்லுங்கள்.  திராவிட நாய்கள் எதற்கும் நேரடியாக பதில் சொல்லாது.

நாங்களாக எதையும் பேசவில்லை. பெரியார் பேசியதைத்தான் சொல்கிறோம். தமிழ் மொழியை பாதுகாக்க போராடியவர்களை சிறுமை படுத்தியவர் பெரியார்.

என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும். திமுக, பெரியாரிய போராட்டக்காரர்களால் எனக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது.

பெரியாரியவாதிகள் வீட்டில் அம்பேத்கர் படம் இருக்கிறதா? பெரியார் பேசியது எழுதியது எல்லாமே தமிழர்களுக்கு எதிரானது.

தமிழ் சனியனை விட்டு ஒழியுக்கள் என்று பெரியார் பேசினார். அந்த சனியனை விட்டு ஒழியுங்கள் என்பது எங்கள் கொள்கை. தமிழ் தேசியம் திராவிடத்தை வீழ்த்தி மேலே வரும்போது தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று சொல்லும்போது கோபம் வருமா வராதா?

கட்சத்தீவை கொடுப்பதில் என்ன ராஜதந்திரம் என்ன இருக்கிறது. மீனவர்களை சாவடிக்கிறது ராஜ தந்திரமா? வாக்கு கேட்கும்போது அண்ணன் செல்வபெருந்தகை இதை சொல்லி ஓட்டு கேட்பாரா? மொத்த பெரியாரிஸ்ட்டுகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Related Post

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

கார்த்திகை தீபம்- திருவண்ணாமலைக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ் …

Posted by - November 23, 2022 0
டிச.6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார்,…

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்

Posted by - September 25, 2023 0
ஈரோடு: தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன. தொழில்துறை…

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 6, 2023 0
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *