2026 சட்டமன்ற தேர்தல்: நிறங்கள் அடிப்படையில் தொகுதி பிரிப்பு.. திமுகவின் புதிய வியூகங்கள்

254 0

திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் திமுக, தங்களின் முந்தைய வெற்றி தோல்விகளின் அடிப்படையில் தொகுதிகளை நிறங்கள் வாரியாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை 10 மாதங்களுக்கு முன்பே திமுக தொடங்கி அதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தொகுதிகளை மண்டல வாரியாக பிரித்து அவற்றுக்கு அமைச்சர்கள், எம்பி எம்எல்ஏக்களை பொறுப்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது. மீண்டும் ஆட்சியமைப்பது மட்டுமின்றி 200க்கும் அதிகமான தொகுதிகளை கைபற்றுவதற்காக, “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” என்ற திட்டத்தையும் திமுக தலைமை செயல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தொகுதிகளை தங்களின் முந்தைய வெற்றி தோல்விகளின் அடிப்படையில் 4 நிறங்களாக திமுக பிரித்து புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி சிவப்பு, ஆரஞ்சு, இளம் பச்சை, அடர் பச்சை என 4 நிறங்களாக தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை திமுக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள், உட்கட்சி பிரச்சனை, தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகள் சிவப்பு நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடுமையான போட்டி இருக்கும் தொகுதிகள், கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டிய தொகுதிகள் ஆரஞ்சு நிறத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வெற்றி பெரும் தொகுதிகள் இளம் பச்சை நிறத்தின் கீழும், நிச்சயம் வெற்றி பெரும் தொகுதிகள் அடர் பச்சை நிறத்தின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “ஒன் டு ஒன்” முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதி இந்த ஆலோசனை தொடங்கியது. அன்றைய தினம் சிதம்பரம், உசிலம்பட்டி, விழுப்புரம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். கடந்த 16ம் தேதி நடந்த ஆலோசனையில் பரமத்திவேலூர், பரமக்குடி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேசிய முதலமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படவும் அறிவுரை வழங்கினார்.
தற்போது சிவப்பு நிறத்தின் கீழ் வரும் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து ஆரஞ்ச், இளம் பச்சை , அடர் பச்சை என ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதை அறிந்து திமுக தனது முழு பலத்தை செலுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுவதாக பத்திரிகையாளர் ஷபீர் அகமது கூறினார். திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளையும் கருத்தில் கொண்டு இந்த பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

Posted by - July 24, 2023 0
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம்…

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - January 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்… ரஜினியும் உதவவேண்டும் – செல்லூர் ராஜு விருப்பம்

Posted by - June 12, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளதாகவும், அவர் மக்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முன் வர வேண்டும் எனவும் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார். ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே…

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *