Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று உயர்வில் முடிவடைந்தன. இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமை வர்த்தக அமர்வை நேர்மறையான பிரதேசத்தில் முடித்தன.
என்எஸ்இ நிஃப்டி 50 1.25 புள்ளிகள் அல்லது 0.01% உயர்ந்து 24,836.10 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 23.13 புள்ளிகள் அல்லது 0.03% உயர்ந்து 81,355.85 ஆகவும் முடிந்தது.
பரந்த குறியீடுகள் ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளின் ஆதாயத்துடன் நேர்மறையாக முடிவடைந்தன.
வங்கி நிஃப்டி குறியீடு 110.30 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 51,406.25-ல் முடிந்தது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் மீடியா பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் எஃப்.எம்.ஜி.சி மற்றும் ஐ.டி. பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
பங்குகள் நிலவரம்
இன்றைய வர்த்தகத்தில் டிவிஸ் லேப், பிபிசிஎல், எல்&டி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 5ஓ குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.
அதே சமயம் டைட்டன் கம்பெனி, பார்தி ஏர்டெல், சிப்லா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை பின்தங்கின.