ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

204 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது.

கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த அண்ணாமலைக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு அதிமுக கெட்ட கட்சியாகிவிட்டதா எனவும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணியில் இருந்து பிரிந்த பின்னர், அதிமுக மற்றும் பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், தலைவர் பதவிக்கு யாருக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

இதே போல, கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக சாடிய நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை முதல்முறையாக பொதுவெளியில் உடைத்துள்ளார் அண்ணாமலை… திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க, அதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.உழைக்காமல் தலைவரான ஒரே நபர், அண்ணாமலைதான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அரசியலில் எப்படி செயல்படவேண்டும் என தனக்கு எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்கவேண்டாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேரடியாக ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

Posted by - December 13, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார்…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

Posted by - January 6, 2026 0
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதனை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் முடித்து…

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

ஒடிசா ரெயில் விபத்து: மாயமான என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல்வைப்பு

Posted by - June 20, 2023 0
கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின.…

குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!

Posted by - March 7, 2025 0
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *