ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

195 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது.

கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த அண்ணாமலைக்கு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு அதிமுக கெட்ட கட்சியாகிவிட்டதா எனவும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டணியில் இருந்து பிரிந்த பின்னர், அதிமுக மற்றும் பாஜக இடையே தொடர்ந்து கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், தலைவர் பதவிக்கு யாருக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

இதே போல, கூட்டணி விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக சாடிய நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை முதல்முறையாக பொதுவெளியில் உடைத்துள்ளார் அண்ணாமலை… திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்க, அதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.உழைக்காமல் தலைவரான ஒரே நபர், அண்ணாமலைதான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அரசியலில் எப்படி செயல்படவேண்டும் என தனக்கு எடப்பாடி பழனிசாமி பாடம் எடுக்கவேண்டாம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் நேரடியாக ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

Posted by - February 9, 2026 0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது…

நடிகரின் அஜித் மகளா இது! ஹிரோயின் போல இருக்காங்க…

Posted by - November 21, 2022 0
அஜித் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளிவரவிருக்கிறது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62வில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் குடும்பம் நடிகர் அஜித் நடிகை ஷாலினியை…

பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

Posted by - December 1, 2022 0
பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி…

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *