சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய்.
தவெக சார்பில் நடைபெறுகிற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சிக்கு தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், 3000 இஸ்லாமியர்களுடன் இணைந்து விருந்து உண்ண உள்ளார் விஜய்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவெகவினரும் விஜய் ரசிகர்களும் ஒய்எம்சிஏ மைதானத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.