வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

242 0

ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் அருகே வானில் பறந்த மர்ம பொருளைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளன என நினைத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விகராபாத் மாவட்டத்தில் மார்பள்ளி கிராமத்தில் மர்ம பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் அந்தப் பொருள் விழுந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்த பொதுமக்கள் அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளதாக வதந்தி பரவவும் , அந்த மர்ம பொருளை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மார்பள்ளி கிராமத்தில் திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மர்ம பொருளை பொதுமக்கள் நெருங்கிவிடாமல் தடுக்கப்பட்டது. ஆந்திரா மாநிலத்தில் மர்ம பொருள் பறக்கும் வீடியோவும், அந்த பொருள் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முதல்கட்ட தகவல்களை சேகரித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்த மர்ம பொருள் ஒரு ஹீலியம் பலூன் எனத் தெரியவந்தது.இதையடுத்து பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஹீலியம் பலூன் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஹீலியம் பலூனில் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பொருட்கள் இருந்ததாகவும். அவற்றைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், அந்த பலூன் புவியின் மேற்பரப்பு ஆராய்சிக்காக அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்தது.

Related Post

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

Posted by - August 12, 2024 0
இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக…

ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!

Posted by - February 8, 2025 0
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட்…

தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Posted by - November 17, 2023 0
புதுடெல்லி: சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன்…

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

Posted by - November 21, 2025 0
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம்…

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்… `பகீர்’ கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

Posted by - August 1, 2023 0
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *